இஸ்லாம் 4 திருமணங்களை அனுமதித்தது ஏன் ?

women-in-islam

இஸ்லாம் மனித வாழ்விற்கான
ஒரு சிறந்த மார்க்கம் ,இதில் எந்த
சந்தேகமும் இல்லை.

இஸ்லாம் பலதாரமணத்தை ஆதரிக்கிறதே என சர்ச்சைகள்
அவ்வப்போது எழுவதை பார்க்கிறோம்.

உண்மையில் 4 திருமணம் என்பது
பல திருமணங்களை குறைப்பதற்காக இறைவன்
விதித்த கட்டுபாடு ஆகும். மாறாக
சலுகை அல்ல.
ஆம்! அரேபியர்களின் அறியாமைகால
(இஸ்லாத்திற்கு முன்) திருமணமுறை
பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அரேபியர்களின் அறியாமைகால
திருமணம் பற்றி பிக்ஹ் சுன்னா
விவரிக்கிறது.
‪*‎ஒருபெண்‬ பருவமடைந்தால் அவளின் வீட்டில் ஒரு கொடி
பறக்கவிடப்படும் அதைகண்டு
ஆண்கள் அந்த வீட்டிற்கு சென்று
விடலாம். -வெளிபடையாக சொன்னால் விபச்சாரம் தான்.

‪*ஒருபெண்ணோடு‬ பலர் சேருவர்
அவளுக்கு பிறக்கும் குழந்தை யார்
சாயலில் உள்ளதோ அந்த ஆணோடு அவள் வாழவேண்டும்

‪*‎மஹர்‬ கொடுத்து திருமணம் முடிக்கும் இஸ்லாமிய முறையும்
இருந்தது.

இதுதான் அறியாமை கால சூழல்
உண்மையில் அப்போதைய காலத்தில் பெண்கள் வெறும்
போதைபொருளாகவே பார்க்கப்பட்டனர்.
மேலும் அக்காலகட்டத்தில் ஒரு
ஆண் 10 முதல் 15 திருமணம் வரை
செய்துகொண்டனர். இதை குறைக்கவே இஸ்லாம் 4 திருமணம் என்ற வரையறையை கொண்டு வந்தது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ௮அறிவிக்கிறார்கள்.
கைலான் இப்னு சலமா அஸ்ஸகஃபி அவர்கள் இஸ்லாத்தில் இணையும்போது
10 அறியாமை காலத்தில் மணந்த
மனைவிகள் இருந்தார்கள். மேலும்
அந்த பெண்களும் அவரோடு
இஸ்லாத்தில் இணைந்தனர்
எனவே நபிஸல் அவர்கள் அந்த
பெண்களில் 4 பேரை தேர்தெடுக்க
கட்டளையிட்டார்கள்.

ஐந்தாவது திருமணம் செய்தால்
அதற்கு இஸ்லாம் கூறும்
தண்டணை:

நான்கு திருமணத்திற்கு மேல்
ஒருவர் திருமணம் செய்வது
இஸ்லாத்திற்கு மாற்றமான
குற்றமாகும் .
இமாம் மாலிக் (ரஹ்) மற்றும் இமாம்
ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது
ஐந்தாவது திருமணம் செய்தவனுக்கு கசையடி அடிக்க வேண்டும் . இமாம் ஜுஹ்ரி (ரஹ்)
அவர்கள் கூறுவதாவது
ஐந்தாவது திருமணம் செய்தவனை
கல்லால் அடிக்க வேண்டும்.

ஆகவே இஸ்லாம் திருமணத்தில்
சரியான ஒழுங்குமுறை கொண்டுவரவே 4 திருமணம் என்ற
கட்டுபாடை விதித்ததே
தவிர அதை ஊக்கிவிபதற்காக
அல்ல.
இந்திய கலாச்சார சூழலில் யாரும்
4 திருமணம் செய்து கொள்வதும்
இல்லை

நட்புடன்

முகமத் ஜுபைர் சித்தீகி அல்புகாரி

பின்னூட்டமொன்றை இடுக