
முஹம்மத் ஜுபைர் அல்புஹாரி
அஸ்ஸலாமு அலா மனித்தப்ப அல் ஹுதா
சத்தியத்தை பின்பற்றுபவர்கள் மீது சாந்தியும் சமாதானமும்
உண்டாகட்டுமாக ஆமீன் …
சில தினத்திற்கு முன் பெண்கள் முகத்தை மறைக்க கூடாது என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்அப் பதிவை அனுப்பி இருந்தார்கள் .பல ஹதீஸ்கள் குர்ஆனுடைய வசனங்கள் இட்டு ஒரு பெரிய ஆய்வாக அந்த கட்டுரை இருந்தது அல்ஹம்துலில்லாஹ். மேலும் அது இணையத்திலிருந்து எடுக்கபட்டது என்பதையும் நான் அறிவேன். ஆனால் அதில் ஒன்று கூட சஹாபாக்கள் கருத்தோ ,இமாம்கள் கருத்தோ இடம்பெறவில்லை என்பதே வருத்தம்.
ஏனெனில் சகாபாக்கள் இமாம்கள் இல்லாமல் இந்த மார்க்கம் நம் கையில் வந்து சேரவில்லை , ஏனெனில் இந்த மார்க்கம் நபிகளிடமிருந்து சகாபாக்கள் அவர்களிடமிருந்து தாபியீன்கள் ,தபா தாபியீன்கள் போன்றோர்கள் மூலமாக ஒரு சங்கிலி தொடராக இந்த மார்க்கம் பாதுகாக்கப்பட்டு நம்மிடம் ஒரு அமானத்தாக வந்துள்ளது .
இமாம்கள் ஒவ்வொரு ஹதீசையும் பல சிரமப்பட்டு நமக்காக பல மையில்கள் பயணம் செய்து இந்த ஹதீஸ்களை தொகுத்து இந்த ஹதீஸ்களை தவறாக இந்த உம்மத் புரிய கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஹதீசுக்கும் இமாம்கள் அதன் விளக்கம் இதுதான்… என ஒவ்வொரு ஹதீஸ்களையும் இந்த உம்மத்திற்கு கவனமாக தொகுத்து கொடுத்துள்ளனர். குறிப்பாக புகாரி இமாம் பற்றி பார்க்கையில் அவர்கள் சேகரித்த மொத்த ஹதீஸ்களில் இந்த மக்களுக்கு குழப்பம் வர கூடாது என்பதற்காக பல ஹதீஸ்களை நீக்கி அதில் மொத்தமாக 7275 ஹதீஸ்கள் இமாம் அவர்கள் கோர்வை செய்திருந்த போதிலும், 4000 ஹதீஸ்கள் மீண்டும் மீண்டும் வராமல் ஒரு தடவை மாத்திரம் பதியப்பட்டிருக்கின்றது. இந்த ‘ஸஹீஹுல் புஹாரீ‘ கிரந்தம்தான் இன்று எம்மத்தியில் பாராயணம் செய்யப்படும், அறபு மதரஸாக்களின் பாடவிதானத்தில் ஹதீஸ் கலைக்காக வேண்டி சேர்க்கப்பட்டும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பழம்பெரும் உஸ்தாதுமார்களினால் ஒருவருட பாடத்திட்டமாக ஏற்படுத்தி ‘ஸஹீஹுல் புஹாரீ‘ இல் உள்ள ஹதீஸ்களுக்கு விளக்கங்கள் போதிக்கப்பட்டும் வருகின்றன
இந்த பொக்கிஷங்களை நாம் நம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து கொடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் உள்ளது .ஏனெனில் அறிவை முன்னிறுத்தி அழிந்த கூட்டங்கள் பல முஹ்தஜிலா , ஹவாரிஜா போன்றவை இன்னும் அதுபோன்ற கூட்டங்கள் அறிவுக்கு பொருந்தாதது மார்க்கத்தில் இல்லை என பல சஹீஹான ஹதீஸ்களை வாய் கூசாமல் மறுத்து விடுகின்றனர் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி அளிக்கட்டும் ,
இங்கு நான் விவாதிக்க இந்த பதிவு இல்லை சத்தியத்தை தேடுபவர்களுக்கான பதிவு ,ஏனெனில் விவாதிப்பவர்கள் ஆதாரத்தை மட்டுமே கேட்பார்கள் ஆனால் சத்தியத்தை உணர மாட்டார்கள் .
இங்கு ஒரு அரபி ஆய்வு கட்டுரை ஒன்றை மூலமாக கொண்டு இந்த கட்டுரை மொழிபெயர்க்கபட்டுள்ளது, அந்த கட்டுரை முகத்தை மூடுவது வாஜிப் என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எழுதபட்டுள்ளது.
அதன் சுருக்கமான தமிழாக்கத்தை இங்கு பதிகிறேன்.
இரு தரப்பினர் ஒன்று முகத்தை மூடுவது கட்டாயம் மற்றொன்று முகத்தைமூடவது கூடாது .இருவரும் பல ஆதாரங்களை தருகின்றனர் . இரண்டும் உண்மையான ஆதாரங்கள் தான் .ஆனால் அவைகளில் நம் சமூகத்திற்கு தேவை , இக்கால சூழலில் எது அவசியம் என்ற கேள்வி எழும்போது ,முகத்தை மூடுவது தான் நமக்கு சிறந்தது என ஆலிம்களும் , உலமாக்கள் சபை போன்றவைகள் வலியுறுத்துகின்றனர்.
அல்லாஹ் குர்ஆனில் சூரத்துன் நூர் 30 வசனத்தில்
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
அதேபோல் அதற்க்கு அடுத்த வசனமாவது பெண்களுக்கு பர்தா கடமையாக்கப்பட்ட வசனம்
” وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوْ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنْ الرِّجَالِ أَوْ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ” سورة النور 31
. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
இந்த இரண்டாவது வசனமே இருதரப்பிற்கும் ஆதாரமாக கொடுக்கபடுகிறது. முஹ்மினான ஆண் பார்வையை தாழ்த்தி கொள்வான் , முஹ்மீனான பெண் பார்வையை தாழ்த்தி கொள்வாள் ,ஆனால் இந்த காபிர்கள் எப்படி பார்வையை தாழ்த்துவார்கள் ??? அதற்கு தான் இந்த பெண்களுக்கான பர்தாவுடைய சட்டம் அவர்களை அலங்காரத்தை எல்லாருக்கும் வெளிக்காட்ட வேண்டாம் என சிலரை மட்டும் விதிவிலக்காக்கி விவரிக்கிறது.
நம் சமூக பெண்களை காபிரான ஆண்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய மிக பெரிய பொறுப்பில் உள்ளோம் , நம் நாட்டு சூழலில் மாற்றுமதத்தவர்களுடனான திருமணங்கள் சமீபமாக கேரளாவில் அதிகம் இது நடைபெறுகிறது . அதில் ஒரு வீடியோ வாட்ஸ்அப்பில் வலம் வந்தது
ஒரு மாற்று மத ஆணுன் நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து அந்த ஆணுடன் போகிற பெண்ணின் கால்களில் விழுந்து கதறும் தாய் , உதறிவிட்டு கல் நெஞ்சத்துடன் சென்ற பெண் இரு நாட்களில் பிணமாக கண்டெடுக்க படுகிறாள். இதில் யாரை குறை சொல்வது நமது இந்திய மற்றும் இலங்கை நாட்டு சூழல் பெருபான்மை சமூகம் இஸ்லாம் அல்லாதவர்கள் அவர்களை சுற்றியே நாம் வாழ்கிறோம் அப்படி இருக்கையில் நம் பிள்ளைகளை பாதுகாக்க பேணுதலா மார்க்கத்தைவூட்டி வளர்ப்பது அவசியம்.
நமது பெண்களில் வெட்க உணர்வை போக்குவதற்கான நாச வேலைகளை காபிர்கள் தான் செய்கிறார்கள் என்றால் நாமும் அதற்க்கு உதவ கூடாது .
நாம் முகத்தை மூட கூடாது என்ற வாதம் செய்தால் முகத்தை மூடக்கூடிய பெண்களும், உங்களால் அவர்களின் பேணுதல் பாதிக்க பட்டு அவைகளும் நிகாப்பை களையும் போது அதன் பாவமும் நம்மை வந்தடையும்.
உங்களுக்கு அந்த சட்டம் தேவை இல்லை எனில் அமல் செய்யாதீர் ,ஆனால் அமல் செய்பவர்களை தடுக்கும் அதிகாரத்தை யார் உங்களுக்கு அளித்தது?
இந்த மார்க்கம் அல்லாஹுவும் அவனது ரசூலும் சொன்னது தானே தவிர நீங்களும் நானும் சொல்வது அல்ல…!
யாராவது நான்கு தமிழ் புத்தகங்களை வாங்கி படித்துவிட்டு நான் தீனை படித்து விட்டேன், நான் சொல்வது தான் மார்க்கம் என்று வந்து வாதம் செய்வார்கள் அதுபோன்ற மடையர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் .
முடிந்தமட்டில் அரபி வழி கல்வியை படியுங்கள் குர்ஆனையும், ஹதீசையும் விளங்குவதற்காக, ஏனெனில் நபிகளாரின் மொழி அரபி , அல்லாஹுடைய வேதம் அரபியில் இறங்கபட்டுள்ளது, சுவன வாசிகளின் மொழி அரபி ஆகும் ,
மேலும் பல ஆயிரகணக்கான மார்க்க விளக்கங்கள் தப்சீர் , ஹதீஸ்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் அரபியில் தான் தான் கிடைக்கபெருகிறது , சஹாபாக்கள் மற்றும் இமாம்கள் கூறிய குர்ஆன் ஹதீஸின் விளக்கங்களை நாம் நாமே படித்து விளங்கி கொண்டால்
நாம் வழிகெட்ட கூட்டங்களின் வழிகேட்டில் இருந்து தப்பிக்கலாம் .
முகத்தை மூடுவது வாஜிப் என்பதற்கு ஆதாரங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாயிலாக தரபடுகிறது மேலும் கியாஸ் அடிப்படையில் விளக்கங்களும் தரபட்டுள்ளது.
“முஸ்லிம்களே அறிந்துகொள்ளுங்கள் அந்நிய ஆடவர்களிடமிருந்து முஸ்லிமான பெண்கள் தங்களின் முகத்தை மறைப்பது வாஜிப் ஆகும் .
முதல் ஆதாரம் குர்ஆனிலிருந்து …
قال الله تعالى : ” وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوْ التَّابِعِينَ غَيْرِ أُوْلِي الْإِرْبَةِ مِنْ الرِّجَالِ أَوْ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ” سورة النور / 31
முகத்தை மறைப்பது வாஜிப் என்பதை இந்த வசனத்திலிருந்து விளங்குவது
பின்வருமாறு ..
- அல்லாஹ் பெண்களை தங்களின் அலங்காரத்தை வெளிக்காட்ட வேண்டாம் ,அவைகளில் இருந்து சாதாரணமாக வெளிபடுவதை தவிர إلا ماظهر منها என்ற வார்த்தையை பயன்படுத்துகிறானே தவிற أظهرن منها ـ என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை அதாவது “அவர்களிடமிருந்து வெளிபடுவதை தவிர “ என அல்லாஹ் பயன்படுத்தவில்லை .மேலும் சில சலபிகள் கூறுகையில் இங்கு மஸ்வூத் ,ஹசன் (ரலி) அல்லாமா இப்னு சீரீன் (ரஹ்) போன்றோர்கள் கூறுகையில் அல்லாஹ் அவைகளிடமிருந்து வெளிபடுவதை தவிர என்பது –ஆடையின் ஓரங்களை குறிபிடுகிறான்.
(கை மணிக்கட்டு பகுதி , பாதம் )
பிறகு அலங்காரத்தை இருமுறை குறிபிடுகிறான் முதலாவது அலங்காரத்தை வெளிபடுத்த வேண்டாம் என்றும், இரண்டாவது வெளிபடுத்த அனுமதித்து சிலருக்கான விதிவிலக்கை குறிபிடுகின்றான்.
இங்கு நீங்கள் பார்க்க வேண்டியது மிக துல்லியமாக கூறலாம் .
அலங்காரத்தை வெளிபடுத்த கூடாதவர்கள் – அந்நிய ஆண்கள்
அலங்காரத்தை வெளிபடுத்த அனுமதிக்க பட்டவர்கள் – இறைவன் குறிபட்ட சிலர் மட்டுமே . இங்கு அலங்காரம் என்பதற்கு கண்டிப்பாக நேரடி பொருள் முகத்தை மறைத்தல் என்பதே ஆகும் , அதை தவிர வேறு எதை பொருள் கொண்டாலும் துல்லியமான பொருள் வராது .
ஏனெனில் அலங்காரத்தை பார்க்க அனுமதிக்க பட்டதில் இச்சை ஏற்படாத சிறுவர்கள், இச்சை வெளிபடுத்த முடியாத முதியவர்கள் என கூறுகளில் அவர்களிடம் வெளிப்படுத்த அனுமதி கூறபடுவது முகமே தான் .
மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹுத்தஆலா வின் மீது சத்தியமாக முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக சூரத்துன் நூரிலே அல்லாஹுத்தஆலா ஹிஜாபுடைய ஆயத்தை இறக்கியவுடன் அவர்களின் மேலதிகமான ஆடைகளைக் கிழித்து அதைக் கொண்டு தங்கள் முகத்தை மூடிக் கொண்டார்கள். (புஹாரி 4578)
இந்த சட்டத்தின் நோக்கம் பெண்களின் பித்னாவிற்கு பயந்து அவர்களின் அவர்களினால் இச்சை ஏற்பட கூடும் என்பதால் , முகம்தான் மொத்த அழகின் வெளிபடுத்தும் , பித்னாவை ஏற்படுத்தும் எனவே முகத்தை மறைப்பது வாஜிப் என்பதில் சந்தேகமில்லை,
- மேலும் அல்லாஹ் கூறிகிறான் : ( ولا يضربن بأرجلهن ليُعلم ما يُخفين من زينتهن ) “தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்;” இதன் விளக்கமாவது சலங்கை போன்ற அணிகலன்களை அணிந்து கால்களை அடித்து நடப்பதால் அவர்களின் அலங்காரத்தை அறிய தூண்டபடுகிறார்கள்.அவர்களின் முகம் எப்படி இருக்கும் அழகானவர்களாக இருப்பார்களா என என்று பித்னா தோன்றும் .
- இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ரஸூல் (ஸல்) அவர்கள்
சொன்னார்கள். “பெண் என்றாலே அவரத்து தான் (அதாவது முழுமையாக மறைக்க பட வேண்டியவள் தான்). அவள் (வீட்டை விட்டு) வெளியானால் ஷைத்தான் அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்து விடுகிறான். அந்த பெண் தனது ரப்புடைய ரஹ்மத்திற்கு மிக நேருக்க மாக இருப்பதெல்லாம், அவளோ வீட்டின் மறைவான உட்பகுதியில் இருக்கும் போதுதான்.
(ஆதாரம் : திர்மிதி 1173, இப்னு ஹிப்பான் 7:446 – 5570, இப்னு குஸைமா –
1686, 1687, தபரானி – 10:122 – 10115)
ஆதாரம் இரண்டு :
قوله تعالى : ( وَالْقَوَاعِدُ مِنْ النِّسَاءِ اللاتِي لا يَرْجُونَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ أَنْ يَضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَرِّجَاتٍ بِزِينَةٍ وَأَنْ يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ) سورة النور / 60
மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
இதன் விளக்கமாவது திருமணத்தை நாட முடியாத பெண்கள் தங்கள் அலங்காரத்தை வெளிபடுத்தி அவர்களின் முக்காடை கழட்டி இருப்பது அதாவது முகத்தை மூடாமல் இருப்பது ஆகுமானது , எனினும் அதிலும் பேணி முகத்தை மூடுவது நலம் என கூறப்பட்டுள்ளது. இங்கு முக்காடு போடாமல் என தலையை துறந்து கொள்ளுதல் என அர்த்தம் வைக்க முடியாது . தலையை துறந்து கொண்டு செல்பவர்கள் நம்மில் யாரும் இல்லை. எனவே இது முகத்தை மூடுவது குறித்தே கூறபட்டுள்ளது என சந்தேகத்திற்கிடமின்றி கூறபட்டுள்ளது.
மேலும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள், அல்லாஹுத்தஆலா வின் வேதத்தை உண்மைப் படுத்துவதிலும் அவன் இறக்கி வைத்ததை ஈமான் கொள்வதிலும் அன்சாரிப் பெண்களை விட சிறந்தவர்களை நான் பார்த்ததில்லை. சூரத்துன் நூரிலே அல்லாஹுத்தஆலா அவர்களுடைய ஹிமார்களைக் கொண்டு அவர்களுடைய மார்புப் பகுதிகளின் மீது போட்டுக் கொள்ளட்டும் என்ற ஆயத்தை இறக்கி வைத்ததும் அவர்களின் ஆண்கள் அவ் வசனம் இறக்கிவைக்கப்பட்ட தை விரைந்து வந்து அப் பெண்களிடம் ஓதிக் காண்பித்தார்கள். அந்தப் பெண்கள் அனைவரும் தமது ஆடையின் பக்கம் எழுந்து சென்றார்கள் . பஜ்ருத் தொழுகையை நபியவர்களுக்குப் பின்னால் தலையையும் முகத்தையும் மூடியவர்களாகத் தொழுதார்கள். அவர்களுடைய தலைகள் மீது காகங்கள் குந்தியிருந்ததைப் போன்று இருந்தது.
(அபுதாவுத்32/4090)
மூன்றாவது ஆதாரம் …
قوله تعالى ( يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا ) الأحزاب / 59
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின் 22ழூ ழூ110 ல் சொல்கிறார்கள்.
மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலை யும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்வுத் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள். அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அபுஉபைதா போன்றோர் கூறுகின்றனர்.
இப்னு அப்பாஸ் (ரலி ) கூறுவதாவது “ அல்லாஹ் முஹ்மீனான பெண்களுக்கு கட்டளையிருகிறான் நீங்கள் தேவையை நிறைவேற்ற வெளியே சென்றால் உங்கள் தலை முந்தானையால் முகத்தை மூடிகொள்ளட்டும் என்றே கூறுகிறான் .
நான்காவது ஆதாரம்
قوله تعالى : ( لا جُنَاحَ عَلَيْهِنَّ فِي آبَائِهِنَّ وَلا أَبْنَائِهِنَّ وَلا إِخْوَانِهِنَّ وَلا أَبْنَاءِ إِخْوَانِهِنَّ وَلا أَبْنَاءِ أَخَوَاتِهِنَّ وَلا نِسَائِهِنَّ وَلا مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ وَاتَّقِينَ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدًا ) الأحزاب / 55 .
(நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது; எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
قال ابن كثير رحمه الله : لما أمر الله النساء بالحجاب عن الأجانب بين أن هؤلاء الأقارب لا يجب الاحتجاب عنهم كما استثناهم في سورة النور عند قوله تعالى : ” ولايبدين زينتهن إلا لبعولتهن ”
இப்னு கஸீர் (ரஹ் ) இந்த வசனத்திற்கு கருத்தாக கூறுவது : அல்லாஹ் இந்த வசனத்தில் திரை எற்படுத்திகொள்ள அவசியமில்லை என உறவினர்களுக்கு அனுமதி அளிப்பது சூரத்துன் நூரில் அனுமதித்தது போல தான் என்கிறார்கள்.அதாவது அலங்காரத்தை வெளிபடுத்தலாம் சில உறவுகளிடம் வெளிபடுத்தலாம் என்பதும் , திரை தேவை இல்லை என்பதும் ஒரே பொருள் தான் என்கிறார்கள் .
ஹதீஸ் அடிப்படையில் முகத்தை மூடுதல்
முதலாவது
قوله صلى الله عليه وسلم : ” إذا خطب أحدكم إمرأة فلا جناح عليه أن ينظر منها إذا كان إنما ينظر إليها لخطبة وإن كانت لاتعلم ” رواه أحمد . .
நபிகளார் கூறினார்கள் “ உங்களில் ஒருவருக்கு பெண்ணை திருமணதிற்கு நிச்சயிக்கபட்டால் அவர்களை பார்ப்பதில் எந்த எந்த குற்றமும் இல்லை .(அஹமத் )
இந்த ஹதீஸ் பெண் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பட்ட பின் பார்த்தல் என்பது முகத்தை பார்த்தல் என்றே விளங்குகிறது . வேறு பாகங்களை பார்க்க அனுமதி இல்லை என்பது நாம் அறிந்ததே . அந்நிய பெண்ணை பார்ப்பது குற்றம் எனவே இந்த ஹதீஸில் திருமனத்திற்கு உறுதியான ஆண் பார்ப்பதில் குற்றம் இல்லை என்கிறது .
அதற்க்கான ஹதீஸ்கள் பல திருமணம் பற்றிய பாடத்தில் விவரிக்கபட்டுளது.
ஆக அந்நிய ஆடவர்கள் பார்க்க அனுமதிக்க படாத பெண்ணை திருமணதிற்கு
உறுதி செய்யபட்ட ஆண் பார்க்க அனுதிக்கபட்டுள்ளது.
நபிகளார் காலத்தில் எல்லா பெண்களும் முகத்தை பார்க்க முடியும் என்றிருந்தால் இப்படி நபிகளார் கூற அவசியம் இருந்திருக்காது.
ماينظر إليه – அவளை பார்த்தல் என்பதற்கு முகத்தை கூறவில்லை என்றால் எதை பார்க்க அனுமதிக்கிறது என்ற மிக பெரிய கேள்வியை முன் வைப்பேன் ?
முகத்தை பார்க்கும் போது அவள் அழகானவளா என்பதை அறியும் பொருட்டு கூறபடுகிறது , மேலும் அவர்களிக்கிடையே அன்பு ஏற்படும் என்றே நபிமொழி கூறுகிறது .
இரண்டாவது
أن النبي صلى الله عليه وسلم لما أمر بإخراج النساء إلى مصلى العيد قلن يا رسول الله إحدنا لا يكون لها جلباب فقال النبي صلى الله عليه وسلم : ” لتلبسها أُختها من جلبابها ” . رواه البخاري ومسلم .
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பெருநாள் தொழுகை
தொளுமிடத்துக்கு பெண்களையும் அனுப்பும்படி நபியவர்கள் கூறிய பொழுது,
பெண்கள் கேட்டார்கள் “யா ரசூலல்லாஹ்! எங்களின் ஜில்பாப் இல்லாதவள்..?”
(என்ன செய்வது?). அதற்கு நபியவர்கள் சொன்னார்கள், “தன் சகோதரி அவளின் ஜில்பாபை அவர்களுக்கு உடுப்பட்டட்டும்”. (அதில் ஜில்பாப் என்று
வருகின்றது (ஆதாரம் : புகாரி – 351. முஸ்லிம் – 2056)
இந்த ஹதீஸ் சஹாபி பெண்மணிகள் தங்களின் ஜில்பாப் என்னும் முகத்திரை இல்லாமல் வெளியே வரமாட்டகள் என்பது தெளிவாகிறது ,
ஐந்தாவது ஆதாரம் ..
عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ ” رواه أبو داوود (1562) .
”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலை யில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள் வோம்”.
என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்.
(நூற்கள்: அஹ்மத் 1562 )
இங்கு ஜில்பாபை கொண்டு முகத்தை மறைத்து கொண்டோம் என்று ஆயிஷா (ரலி) அவர்களே கூறுகையில் ஜில்பாப் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கற்பிப்பது குற்றம் ஆகும்.
மேலும் ஒரு ஹதீஸில்
ஜில்பாப் என்றால் முகமூடி என்பது என்னுடைய சொந்த கருத்து இல்லை.மாறாக ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்து
புகாரியில் வரக்கூடிய ஆயிஷா (ரழி) அவர்களின் விடயத்தில்
இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் இதற்கு ஆதாரமாகும்.
அதில் அவர்களே சொல்கின்றார்கள்.
فبينا أنا جالسة في منزلي غلبتني عيني فنمت، وكان صفوان بن المعطل السلمي
ثم الذكواني من وراء الجيش فأدلج فأصبح عند منزلي، فرأى سواد إنسان نائم،
فأتاني فعرفني حين رآني، وكان يراني قبل الحجاب، فاستيقظت باسترجاعه حين
عرفني، فخمرت وجهي بجلبابي،
இதன் தமிழ் மொழி பெயர்ப்பு :-
ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார்.
பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப்
பார்த்திருந்தார். எனவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து
கொண்டார். அவர், என்னை அறிந்து கொண்டு, ‘இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண்
விழித்தேன். உடனே என்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக்
கொண்டேன்.இதில் இந்த வார்த்தையை கவனியுங்கள் .
ஜில்பாப் என்றால் முகமூடி என்று அவர்களே சொல்கின்றார்கள்فخمرت وجهي بجلبابي – உடனேஎன்னுடைய முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன்.
இது ஜில்பாப் என்றால் முகமூடி என்பதற்கான பலமான ஆதாரமாகும்.
(இதில் ஹிஜாப் என்றால் என்ன என்றும் தெளிவாகின்றது.
ஹிஜாப் என்றாலும் முகமூடிதான்.)
முகத்தை மூடவேண்டும் என்பதற்கான காரணிகள்
1 . பெண்களினால் ஆண்களுக்கு ஏற்படும் பசாத் என்னும் குழப்பத்தை தவிர்த்தல். ஏனெனில் பெண்கள் தன் முகத்தை அலங்கரித்து கொள்ளுதல் , தம்மை அழகுள்ளவள் என பிறர் கூற வேண்டும் என விரும்புதல் , தன்
அழகை ஆடவர்கள் பார்த்து வியக்கவேண்டும் என்ற பெருமை கொள்ளுதல் போன்ற பித்னாக்கள் உண்டாகும் …
2 பெண்களின் வெட்க உணர்வு போய்விடும் ..
ஏனெனில் வெட்கம் ஈமானின் ஒரு பகுதி என்பது நபி மொழியாகும்.
மேலும் மற்றொரு நபிமொழியாவது
الحياء والإيمان قرناء جميعا، فإذا رفع أحدهما رفع الآخر،
வெட்கமும் ஈமானும் இணை பிரியாதவை. இரண்டில் ஒன்று உயர்த்தப்படுமாயின் மற்றையதும் உயர்த்தப்படும்.” (அல்ஹாகிம் )
இந்த ஹதீஸ் வெட்க உணர்வின் முக்கியத்துவத்தை கூறுகிறது.
உண்மையில் மனிதனுக்கும், மிருகத்திற்கும் உள்ள வேறுபாட்டை பிரித்து காட்ட கூடியது வெட்க உணர்வே ஆகும் .
أشد حياءً من العذراء في خدرها
வெட்க உணர்வில் ஆக சிறந்தது பருவ பெண்ணின் வெட்கம் ஆகும் என்ற நபிமொழி காண கிடைக்கிறது .
சைத்தான் ஆதமின் மகனின் இரத்த நாளங்களில் ஓடி கொண்டிருக்கிறான் .
எப்போதும் நம்மை வழிகெடுக்கும் வேலைகளை தூண்டுகிறான்,
மேலும் இங்கு நாம் மலக்குகள் போல் படைக்கப்படவில்லை , இச்சை உணர்வுடன் படைக்க பட்ட மனிதன் என்பதை நினைவில் கொள்க .
3 ஆண் பெண் கலப்பை ரசூலுல்லாஹ் வெறுத்தார்கள் .அதனால் குழப்பம் ஏற்படும் பெண்களின் வெட்க உணர்வு போய்விடும் .
أخرج الترمذي (5272) عَنْ حَمْزَةَ بْنِ أَبِي أُسَيْدٍ الأَنْصَارِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ خَارِجٌ مِنْ الْمَسْجِدِ فَاخْتَلَطَ الرِّجَالُ مَعَ النِّسَاءِ فِي الطَّرِيقِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلنِّسَاءِ اسْتَأْخِرْنَ فَإِنَّهُ لَيْسَ لَكُنَّ أَنْ تَحْقُقْنَ الطَّرِيقَ ، عَلَيْكُنَّ بِحَافَّاتِ الطَّرِيقِ . فَكَانَتْ الْمَرْأَةُ تَلْتَصِقُ بِالْجِدَارِ حَتَّى إِنَّ ثَوْبَهَا لَيَتَعَلَّقُ بِالْجِدَارِ مِنْ لُصُوقِهَا بِهِ ” حسنه الألباني في صحيح الجامع ( 929 )
ஒருமுறை நபிகளார் பள்ளிவாசலில் இருந்து வெளியேறும்போது பாதையில் (தொழுதுவிட்டு சென்ற ) ஆண்கள் பெண்கள் கலந்து வெளியேறுவதை கண்ட நபிகளார் பெண்களை பார்த்து “நீங்கள் பாதைகளின் ஓரங்களை பற்றி பிடித்துகொள்ளுங்கள் “என்ற மாத்திரம் சஹாபி பெண்மணிகள் தங்கள் ஆடைகள் சுவர்களில் உரசும் அளவிற்கு சுவருக்கு மிக நெருக்கமாக நடந்து சென்றார்கள் என்பதை பார்க்கிறோம் .
இறுதியாக ஒரு விடயம் முகத்தை மூட கூடாது என்று தங்கள் சொன்ன கூட்டம் இன்று விபசார வழக்குகளில் சிக்கி சீர்கெட்டு போய்விட்டனர் .
தங்களிடம் பிரச்சனைக்கு தீர்வுகேட்டு அல்லது மார்க்கம் கற்க வந்த பெண்களை தங்கள் இச்சைகளுக்கு தீனி ஆக்கிக்கொண்ட கூட்டத்தை தான்
நாம் பார்க்கிறோம் .
மேலும் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் கொள்வது , நம் மார்க்க நடைமுறையை மாற்றுவதும் யூதர்களின் திட்டங்களில் உள்ளவை ஆகும்
அல்லாஹ்வே அனைத்திற்கும் போதுமானவன் .
நட்புடன்
முஹம்மத் ஜுபைர் சித்தீகி அல்புஹாரி
கட்டுமாவடி .
Arabic Article for Ref : https://islamqa.info/ar/11774
மேலும் எனது சில கட்டுரைகளை படிக்க ..
இஸ்லாமிய இளைய சமூகமும், யூதர்களின் திட்டங்களும்
https://suvanapparavai.wordpress.com/2015/01/05/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF/
முஹ்தஸிலா கூட்டத்தின் தோற்றம் !
https://suvanapparavai.wordpress.com/2015/01/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B/
இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் ஹதீஸ் சேகரிப்பும் அதன் உண்மை தன்மையும்
https://suvanapparavai.wordpress.com/2015/01/14/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய ஹதீஸ்களின் தரம்
https://suvanapparavai.wordpress.com/2015/01/14/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9/